கடந்த வெள்ளிக்கிழமையன்று, தனது உயிரை மாய்த்துக் கொண்ட காரைதீவைச் சேர்ந்த சுகுமார் டினேகா என்ற 17 வயதுச் சிறுமியின் சடலம், ஆறாம் நாளன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து, சிறுமியின் சடலம், காரைதீவு இந்து மயானத்தில் நேற்று (24) காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 6 நாள்களாகக் கையளிக்கப்படாமல் இழுபறியிலுள்ள சிறுமியின் உடலை கையளிக்க அரசும், நீதித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவுகள் மேற்கொண்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்தே, சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.