தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 563 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 46,823 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன், நேற்று (02) மாத்தளை மாவட்டத்தில் 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்த 564 பேரும் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.