நாட்டில் அமுல்படுத்தப்படும் மின்சார துண்டிப்பை அதிரடியாக தவிர்ப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி இந்த உறுதி மொழியை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில், மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை திறைசேரி மற்றும் மத்திய வங்கி எடுக்குமென இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.