மரக்கறிகளின் விலை உயர்வுக்கு காரணம் என்ன ?

 


நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தொடர்ந்தும் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 கொழும்புக்கு மரக்கறிகள் கொண்டு வரப்படும் தம்புள்ளை, தம்புத்தேகம, கப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை மிக அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

 மழையால் பயிர்கள் அழிந்து வருவதே இதற்கு காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆனால், குறைந்த விலையில் காய்கறிகள் கொண்டு வந்தாலும், பொருளாதார மையங்களில் உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்

 ஒரு கிலோ கரட் ரூ.1,000, இஞ்சி ரூ.1,900, பச்சை மிளகாய் ரூ.1,800, கறி மிளகாய் ரூ.900, தக்காளி ரூ.900, கத்தரிக்காய் ரூ.800, வெண்டைக்காய் ரூ.560 என பதிவாகியிருந்தது.

 எனினும், சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வால் தமக்கு உரிய பலன் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மரக்கறிகளின் விலைகள் மட்டுமன்றி மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.