கிழக்கு, ஊவா, தெற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல்
மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில்
மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என
வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை
மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு மேல் கனமழை பெய்ய
வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.