தினமும் 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை.

 


2023ஆம் ஆண்டு முதல் தினமும் 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஜனவரி மாதம் முதல் தினமும் 10 மணிநேரம் மின்சாரம் தடைபடலாம் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் நேற்றைய தினம் (20) தெரிவித்திருந்தது.

குறித்த கருத்தினைவெளியிட்ட மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக இன்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அமைச்சர் குறிப்பிட்டார்.

மின் உற்பத்திக்கான நிலக்கரி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அடுத்த சில நாட்களில் 300 மெகாவோட் மின் உற்பத்தியை இழக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் நேற்று தெரிவித்தது.