மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற கலைச்சங்கமம் நிகழ்வு -2022

























 


























மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று (02) திகதி வெள்ளிக்கிழமை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில்
மிகப்பிரமாண்டமாக இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்து சிறப்பித்தார்.

 குறித்த நிகழ்விற்கு விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி.சரண்யா சுதர்ஷன், சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின்
பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி, ஓய்வு பெற்ற கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எம்.பவளகாந்தன், காத்தான்குடி மத்திய கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் எம்.எம்.எம்.மஃரூப் கரீம் ஆகியோரும்
சிறப்பு அதிதிகளாக 14 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

பாரம்பரிய இசை முழங்க
அதிதிகளுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பிரதம அதிதியினால் சுமாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து
மங்கல விளக்கேற்றப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து, மாவட்ட செயலக கீதம் என்பன இசைக்கப்பட்டு பிரதான அரங்க நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன் அவர்களின் வரவேற்புரை மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி சிறிகாந்த் அவர்களின் தலைமையுரையினைத் தொடர்ந்து மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது..

அத்தோடு நிகழ்விற்கு விஷேட அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி.சரண்யா சுதர்ஷன், சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின்
பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி, ஓய்வு பெற்ற கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எம்.பவளகாந்தன், காத்தான்குடி மத்திய கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் எம்.எம்.எம்.மஃரூப் கரீம் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு மலர் மாலை அணிவித்து கௌரவமளிக்கப்பட்டதுடன், மாவட்ட அரசாங்க அதிபரின் சிறந்த சேவையை பாராட்டி இதன்போது கலாசார மற்றும் சமூர்த்தி பிரிவுகளினால் பொன்னாடை போர்த்தப்பட்டு மலர் மாலை அணிவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து
கலைஞர்களுக்கான பாராட்டும் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களின் விசேட உரையினைத் தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.