மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகாலை பாரிய மின்னல் தாக்கத்தினால் 27- கால்நடைகள் கருகி சாம்பலாகியுள்ளன.

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (25) அதிகாலை பாரிய மின்னல் தாக்கம் ஏற்பட்டது.

இதனால் ஏறாவூர் -றஹ்மானியா பாடசாலை வீதி எட்டாம் ஒழுங்கையிலுள்ள இஸ்மாயில் அன்வர் கால் நடைகள் கருகி சாம்பலாகியுள்ளன.

இதற்கமைய, 9 ஆடுகள், 11 கோழிகள், 4 சேவல்கள், 3 வாத்துக்கள் போன்றவை கருகி சாம்பலாகியுள்ளன.

அத்துடன் குறித்த பகுதிகளிலுள்ள பலரின்  வீட்டு மின்சாரப் பொருட்களும் சேதமடைந்துள்ளன.