இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்றுக்கு முதலாந்தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு 40 ஆயிரம் ‌ரூபாய் தேவைப்படுகிறது.

 


நாட்டு மக்கள் ஒருவேளை உணவுக்குக்கூட சிரமப்படும் நிலைக்கு வந்துள்ளனர். இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்றுக்கு முதலாந்தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு 40 ஆயிரம் ‌ரூபாய் தேவைப்படுகிறது என்றார்.

நாம் கூறியதை கேட்காத மொட்டுக் கட்சி அரசாங்கம், தமது கடந்தக் கால பயணம் தவறு புதியப் பாதையில் பயணிக்க ​வேண்டும். புதியப் பாதை சிரமமானதாக இருக்கும் என இப்போது கூறுகிறது. இவர்களால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது. லீகுவான் வந்தாலும் இந்நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. 

மக்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் மீண்டும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற மக்கள் ஒன்றிணைய வேண்டுமென கேட்கிறார்கள் எனவும் விமர்சித்த ஹர்ஷ டி சில்வா, குறிப்பிட்டளவு பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் எனவும் தெரிவித்தார்.