மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஒளி விழா!!

 






 

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஒளி விழா!!
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஒளி விழா நிகழ்வு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை ஏ. நவரெட்ணம், அருட்தந்தை ஏ.எஸ்.சுபேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.