போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி. இ. ராகுலநாயகி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் குறைந்த வருமானம் பெறும் குடுப்பங்களைச் சேர்ந்த கர்ப்பினி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான பால்மாப் பொதி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திரு. வி.துலாஞ்சனன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. ச.சசிகுமார், பாலையடிவட்டை இராணுவ முகாம் கேப்டன் நிமல் திசாநாயக்க உட்பட போரதீவுப்பற்று பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது குறைந்ந வருமானம் பெறும் 376 குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தலா இரண்டு பால்மா பொதிகள் வீதம் வழங்கிவைக்கப்பட்டன.