பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார் சிரேஷ்ட மாணவனொருவன் முதலாம் வருட மாணவனைத் தாக்கிய சம்பவம் ஒன்று, நேற்று (17) பதிவாகியுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் ஐய்வர் ஜெனிக்ஸ் விடுதிக்குள் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிரேஷ்ட மதுபோதையில் வந்து, முதலாம் வருட மாணவனைத் தாக்கியதாகவும் இதன்போது காயமடைந்த மாணவன் பேராதனை வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு இலக்கான முதலாம் வருட மாணவன் நோட்டன்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தாக்குதல் நடத்திய மாணவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பேராதனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.