அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழி வாண்மையை மேம்படுத்துவதற்காகவும் அவர்களின் அலுவலக கடமையில் ஈடுபடும் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.
அரச உத்தியோத்தர்களுக்கான 150 மணித்தியாலம் 19 நாள் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறிக்கான இறுதி நாள் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணிய மூர்த்தி தலைமையில் இடம் பெற்றதுடன் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன், மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், மாவட்ட செயலக கணக்காளர் வினோத், புள்ளிவிபரவியலாளர் ஜெயந்தனன் மற்றும் சிங்கள பாடநெறி வளவாளர்களாக ந.துஜோகாந்த், பி.ஜி.ஆர்.டி.சுதர்சிக்கா மற்றும் மாவட்ட சிங்கள பாடநெறிக்கான இணைப்பாளர் வி.சந்திரகுமார் என பலர் கலந்துகொண்டனர்.
அதிதிகளுக்கு பாரம்பரிய முறைப்படி வெற்றிலை கொடுத்து வரவேற்று மங்கள விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
கற்கை நெறியினை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களினால் கண்கவர் கலை கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இக் கற்கைநெறியில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் 50 அரச உத்தியோகத்தர்கள் கற்கைநெறியினை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.