இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகை எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்கும் .

 


2023 ஆம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என, சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எனினும், 2024 ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (01) நடந்த  ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பெர்னாண்டோ, இலங்கையின் சுற்றுலா வரும் மாதங்களில் வளர்ச்சியடையும் என்றும், பல விமான நிறுவனங்கள் இலங்கைக்கு விமான சேவைகளை முன்னெடுக்க திட்டப்பட்டுள்ளதாக கூறினார்.

எவ்வாறாயினும், 2024 இல் சுமார் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே உண்மையான இலக்கு என்று பெர்னாண்டோ தெளிவுப்படுத்தினார்.