நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது.

 


நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது. நாட்டை பிளவுபடுத்த பெரும்பான்மையான மக்கள் இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தை புறக்கணித்தமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

“நாட்டின் பொருளாதாரம் குறுகிய காலத்தில் திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.

பொருளாதார பாதிப்பை தொடர்ந்து ஒரு சில புலம்பெயர் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டு தற்போது அதிகார பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது.

அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது அதனால் ஜனாதிபதி தலைமையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை. நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது.

நாட்டை பிளவுபடுத்த பெரும்பான்மையான மக்கள் இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் மாத்திரம் இடம்பெறுகின்றன.