கொழும்பு நாரஹேன்பிட்டி பார்க் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடி கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாரஹேன்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹாலிஎல, திக்வெல்லஹேன பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மாணிக்கம் என்ற இருபத்தி மூன்று வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கட்டட வேலையில் ஈடுபட்டு வந்த இந்த இளைஞன் விருந்து நடத்தியதாகவும், விருந்து முடிந்து சில தேவைக்காக கீழே இறங்கிய போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.