மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கெத்செமனே கொஸ்பல் ஆலய ஞாயிறு பாடசாலை மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு நடைபெற்றது.

 



மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுகுட்பட்ட மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கெத்செமனே கொஸ்பல் ஆலய ஞாயிறு பாடசாலை மாணவர்களின் வருடாந்தம் ஒளிவிழா நிகழ்வு ஆலய தலைமை போதகர் அருட்பணி பி .டப்ளியு . மரியதாஸ் தலைமையில் ஆலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது

ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை மலர்மாலை அணிவித்து பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்
இதனை தொடர்ந்து விசேட ஜெப ஆராதனை வழிபாடுகளுடன் மாணவர்களின் ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றது .

ஒளிவிழா நிகழ்வில் அதிதிகளாக மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சுபா சதாஹரன் . மட்டக்களப்பு வலயக்கல்வி உதவி கல்விப்பணிப்பாளர் கே .ஹரிஹரராஜ் ,ஸ்ரீலங்கா விமானப்படையின் மட்டக்களப்பு விமானப்படை அதிகாரி குரூப் கேப்டன் வர்ணசூரிய , 231 பாதுகாப்பு படைப்பிரிவு அதிகாரி லெப்டினெல் கேணல் தம்மிக்க வீரசிங்க , மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எஸ் .ராஜன் , போதகர் கிறிஸ்துதாஸ் , அருட்பணியாளர்கள், ஞாயிறு பாடசாலை ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் .பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .

2022 ஆம் ஆண்டு ஒளிவிழா சிறப்பு நிகழ்வாக ஜெயந்திபுரம் கிராம சேவையாளர் பிரிவில் வறுமை கோட்டின்கீழ் வாழும் பல் சமய குடும்பம்களின் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன