விஞ்ஞான ரீதியான கலந்துரையாடல் மகாநாடு கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றது .

 


இந்திய நாட்டு சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் இணைந்து நடாத்துகின்ற ‘ஒரே குடும்பம் ஒரே உலகம்’ என்ற தொனிப்பொருளினாலான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மகாநாட்டில் பிரதம அதிதியாக ஸ்ரீ சத்திய சாயி பாபா பவுன்டேஷன் அமைப்பின் ஸ்தாபகர் சட் குரு ஸ்ரீ மதுசுதன் சாய் கலந்துகொண்டுள்ளார் .

தற்போது இலங்கை எதிர்கொள்கின்ற சவால்களுக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ,ஆராச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்யலாம் என்பது தொடர்பான விஞ்ஞான ரீதியான கலந்துரையாடல் மகாநாடு கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கனகசிங்கம் தலைமையில் நடைபெறுகின்றது .

இம்மகாநாட்டில் பங்களாதேஷ் ஜஹான் ஜிர் நாகர் பல்கலைக்கழக விரிவுரையாளர் அணு முஹம்மட்,
இந்தியா நாட்டு இலங்கைக்கான தூதுவர் மற்றும் இந்தியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை நாட்டு அறிஞர்கள்,ஆய்வாளர்கள், விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்