மட்டக்களப்பில் மியன்மார் அரசாங்கத்தின் நிவாரண பொதிகள் விநியோகம்!!

 



மியான்மார் அரசாங்கத்தின் உதவியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அரிசிப் பொதி உணவு ஆணையாளர் திணைக்களத்தினூடாக பிரதேச செயலகங்களுக்கு பொருளாதார சிக்கலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நோக்குடன் நேற்று (11) கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் பொருளாதார நெருக்கடியால் பாதிப்பிற்குள்ளான 650 குடும்பங்களுக்கு தலா 20கிலோ வீதம் அரிசி பொதிகள் வழங்கப்பட்டன.
இதன்போது மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், கிராம நிருவாக உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.