உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு ஹெல்ப் எவர் அமைப்பினரால் நாவலடி கடற்கரை பிரதேசத்தில் சிரமதான பனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது





2023ம்  வருட  சர்வதேச   சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  Beat Plastic Pollution எனும் தொனிப்பொருளில் பிளாஸ்டிக் பாவனையை குறைக்கும் முகமாக மட்டக்களப்பில் இயங்கி வரும்  முன்னணி  தன்னார்வ தொண்டர் நிறுவனமான ஹெல்ப் எவரின்  உறுப்பினர்களால்     மட்டக்களப்பு நாலவடி கடற்கரையில்  பகுதியில் சிரமதானம் பணி  மேற்கொள்ளப்பட்டது.

ஹெல்ப் எவர்  அமைப்பினர் வருடா வருடம்   சர்வதேச   சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடற்கரை பிரதேசத்தில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி கடற்கரையை  தூய்மை படுத்தி  வருவது  குறிப்பிடத்தக்கது.