மாபெரும் இரத்ததான நிகழ்வு திருப்பழுகாமத்தில் நடைபெற்றது.

 


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையிலான மாபெரும் இரத்ததான நிகழ்வு  திருப்பழுகாமத்தில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று திருப்பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் இளைஞர்களின் ஏற்பாட்டில் ‘உதிரம் ஈந்து உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளின்
இரத்தானமுகாம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர் க.விவேகானந்தநாதன் தலைமையில் இரத்ததானமுகாம் இடம்பெற்றது.