தலங்கம பிரதேசத்திலுள்ள விடுதியொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த பெண்ணின் உடைமைகளிலிருந்த தேசிய அடையாள அட்டையின் மூலம் அவர் 1973 ஆம் ஆண்டில் பிறந்தவர் என தெரிய வந்துள்ளது.
குறித்த பெண் ஒரு மனநல மருத்துவர் என்றும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார் என்றும் தெரிய வருகிறது.
மரணம் தொடர்பில் சந்தேக நபர்கள் யாரும் இதுவரை இனங்காணப்படாததுடன் தலங்கம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.