(கல்லடி செய்தியாளர்)
சந்திரோதயம் கலை இலக்கியப் பெருமன்றத்தினரின் ஏற்பாட்டில் "மலையகம் 200" நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17) மட்டக்களப்பு பொது நூலகத்தில் இடம் பெற உள்ளது
இந்நிகழ்வில் பிரதான உரையினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கலை இலக்கிய மற்றும் அரசியல் செயற்பாட்டாளருமான ம.திலகராஜ் நிகழ்த்துகிறார்.
இதன்போது கிழக்கின் அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் அழைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.