ஜனாதிபதியின் ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மக்களுக்கு நன்மை!!

 



ரணில் 2024 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க அவர்களுக்குமான சந்திப்பு கடந்த (06) திகதி ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இதன் போது க.மோகன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான வீடுகளை புனரமைக்க தலா 150,000/= ரூபாவும், மலசல கூடங்களை புரைமைக்க 50000/= வீதமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் முற்கட்டமாக 150 வீட்டு பயனாளிகளும், 300 மலசல கூட பயனாளிகளும் பயனடையவுள்ளதுடன், அடுத்த வருடம் ஜனவரி நடுப்பகுதியில் செயற்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரணில் செயலணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இஸ்ரேல் நாட்டுக்கு தொழில்பெற 50 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், டிசம்பர் கடைசிக்கு முன்னதாக பயண ஒழங்குகளும் ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.