உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது

 


திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவில் வான்-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அருனலு குளத்தில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

யானையின் சடலம் தொடர்பில் அப்பகுதி விவசாயிகள், வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தெரிவித்துள்ளதை தொடர்ந்து, கந்தளாய் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று யானையின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கமைய 8 வயது மதிக்கத்தக்க பெண் யானையே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.