Child action Lanka நிறுவனத்தின் திறன் சார் அபிவிருத்தி கற்கைநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு - 2023

 






ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் தோற்றிய மாணவர்களுக்கான திறன் சார் கற்கை நெறியின் நான்கு மாத கற்கை நெறியை நிறைவு செய்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்களின் ஆலோசனையின் கீழ் கணக்காளர் திருமதி.டிலானி ரேவதன் தலைமையிலும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆர்.எம்.றுசைட் ஏற்பாட்டிலும் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிறுவனமானது முற்றிலும் இலவசமாக 20 மாணவர்களுக்கான கற்கை நெறியினை வழங்கியதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இந்நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி நிலைய முகாமையாளர்
திருமதி அஃப்ரா வக்கீல், உதவி சுகாதார வைத்தியர் திருமதி.ஹஸ்மத் சியாம், மாவட்ட NGO ஒருங்கிணைப்பாளர் சுதர்ஷன் ஆகியோரும் கலந்து கொண்டதுடன் மாணவர்களது பெற்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.