மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் VAT வரியை நீக்குமாறு கோரிக்கை.

 

 


 

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் VAT வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இந்த வரியையேனும் நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ் மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் தரவுகளின் பிரகாரம், இந்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மொத்த சனத்தொகையில் 8.7% ஆன 16 இலட்சம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், பல வருடங்களாக மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படாததால், இந்த எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம் என்றபடியால், மேற்குறிப்பிட்ட சனத் தொகை கணக்கெடுப்புக்கு பயன்படுத்தப்பட்ட முறைமையினால் அதிகளவான நபர்கள் இதில் உள்வாங்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2003 இல் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தேசிய கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும்,2 016 ஆம் ஆண்டில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் பிரகடனத்திற்கு உடன்பட்டுள்ளதாகவும், எனவே இது தொடர்பான சட்ட விதிகளை உருவாக்குவதற்கான சட்டப்பூர்வ கடமை இருந்தாலும், இதற்கு அரசாங்கம் கூடிய பங்களிப்பை வழங்குவதை கண்டுகொள்ள முடியாதுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இத்தகைய மாற்றுத்திறனாளிகள் இருப்பது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிப்பதால், இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்ப அலகுகள் அதிகளவில் இருப்பதால், அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்தப்பட