இஸ்ரேலின் மிலேச்சத்தனமான வான் வழித் தாக்குதல் , 29பேர் காசாவில் உயிரிழந்துள்ளனர் .

 

 


பாலஸ்தீனத்தில் காசா, ரஃபா நகரங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில்  காசா நகரில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசாவின் அப்சான் பகுதியில் உள்ள அல்- அவ்டா பாடசாலை மீது குறிவைத்து இஸ்ரேல் ராணவம் இந்த வான் வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள கான் யூனிஸ் நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறனறனர். தாக்குதலில் போது சுமார் 2,000 பேர் பாடசாலையில் இருந்துள்ளனர்

கடந்த 4 நாட்களில் காசாவில் தாக்கப்பட்ட 4 ஆவது பாடசாலை இதுவாகும். இந்த தாக்குதலை மோசமான படுகொலை என்று தெரிவித்துள்ள பாலஸ்தீன ஊடகம், உயிரிழந்த 29 பேரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிவித்துள்ளது. 'நாங்கள் பாடசாலை வாசலில் அமர்ந்திருக்கும்போது, ராக்கெட்டுகள் எங்களை நோக்கி பாய்ந்தன' என்று தாக்குதலில் உயிர்பிழைத்த முகமது சுக்கார் என்பவர் தெரிவித்துள்ளார்.