கட்டுநாயக்காவில் இருந்து தென்கொரியாவின் தலைநகரான சியோல் நோக்கி பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL 470 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக (2024.07.07) பிற்பகல் தரையிறங்கியுள்ளது.
அந்த விமானத்தில் 146 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் மற்றொரு விமானம் மூலம் சியோல் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.