(மட்டக்களப்பு நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மேக்கர் ஸ்பேஸ் நிறுவனத்தினை நேற்று செவ்வாய்க்கிழமை (09) திறந்து வைத்தார்.
மேக்கர் ஸ்பேஸ் நிறுவ (Maker Space) பணிப்பாளர் என்.கிசோர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற கிழக்குமாகாண கல்வி பணிப்பாளர் அகிலா கனகசூரியம் மற்றும் 243 ஆவது இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறார்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் முகமாக புதிய விஞ்ஞானத் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காக இந் நிறுவனம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
உயர் தொழில்நுட்பத்தினாலான கருவிகள் மற்றும் இயந்திரங்கள் மூலம் இளைஞர், யுவதிகளுக்கு கற்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
மேலும் நவீன உலகில் புதிய தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கும் புதிய தொழில் முயற்சியாளராக உருவாக்குவதற்கும் மேக்கர் ஸ்பேஸ் நிறுவனம் தனது சேவையை வழங்கவுள்ளது.
மேலும் இந் நிறுவனத்தினால் நடமாடும் பேருந்தின் மூலம் தூர பிரதேசங்களுக்குச் சென்று தொழில்நுட்ப அறிவைப் பரவலாக்குவதற்கு முனைப்புடன் செயற்படவுள்ளது.
மேலும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட உயர் அதிகாரிகளுக்கு கெளரவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஹரிகரராஜ், ஐகப் நிறுவன இணைப்பாளர் எஸ். சுகிர்தராஜ், மாணவர்கள், பெற்றேர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.