அதிவிரைவாக கணக்குகளை சரி செய்வதன் மூலம் இன்று சோழன் உலக சாதனை படைத்த மட்டக்களப்பு காவியஸ்ரீ.

 





















































பொறியாளர் சுப்ரமணியம் மற்றும் மருத்துவர் ஹிசாந்தினி ஆகியோரின் மகள் ஐந்து  வயதும் பத்து மாதங்களுமான பள்ளி மாணவி செல்வி.காவியஸ்ரீ.
இவர் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கு 8 நிமிடங்களில் விடையளித்து சோழன் உலக சாதனை படைத்தார்.

இதற்கான நிகழ்வானது இன்று 08.09.2024 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.30 மணிக்கு மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள கிரீன் கார்டன் ஹோட்டலில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் நடை   பெற்றது
இதன் போது தனக்கு வழங்கப்பட்டிருந்த 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கான சரியான பதிலை 8 நிமிடங்களில் எழுதி சோழன் உலக சாதனையை  நிலைநாட்டினார்
இந்த நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம், பீபல்ஸ் ஹெல்பிங் பீபல்ஸ் பவுண்டேஷன் மற்றம் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தின .

சோழன் உலக சாதனை படைத்த சிறுமிக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை போன்றவைகளை வழங்கிப் பாராட்டப்பட்டார் , 
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை நிகழ்வின் முதன்மை விருந்தினராக மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் அவர்கள் பங்குபற்றவுள்ளதோடு  நிகழ்வைத் தலைமேயேற்று  கதிரவன் த.இன்பராசா அவர்கள் நடத்தினார் .

சிறப்பு விருந்தினர்களாக
திரு R.J.பிரபாகரன்
கோட்டக் கல்வி பணிப்பாளர்
மண்முனை வடக்கு, திருமதி சித்ரா இளமநாதன்
பணிப்பாளர்   UCMAS - இலங்கை,

திரு சி.சதீஸ்குமார்   UCMAS - மட்டக்களப்பு ஆகியோரும்

கௌரவ விருந்தினர்கள்   கவிஞர் அ.அன்பழகன் குரூஸ் ஆலோசகர் கதிரவன் பட்டிமன்றப் பேரவை,
திரு ச.ஜெயராஜா   தலைவர்  உதவும் கரங்கள்,
கலாநிதி V.R.மகேந்திரன்   தலைவர் அகிலன் பவுண்டேசன்,
திருமதி. பேரின்பம் பார்வதி   (சோழன் உலக சாதனை புத்தக  நிறுவனத்தின் கனேடிய நாட்டிற்கான தலைவரின் தாயார்)
திரு ஜேசுதாசன் மோசஸ்
மட்டக்களப்பு முன்னாள் மாநகர முதல்வர் T.சரவணபவன் மற்றும்
PHPF - மட்டக்களப்பு ஆகயோரும் பங்கேற்றனர் .
வரவேற்புரையுனை
சோலையூரான் ஆ.தனுஸ்கரன்  உபதலைவர் , கதிரவன் அவர்களும்,
நன்றியுரைனை   சர்மிளா சுப்பிரமணியம் அவர்களும்,
நிகழ்ச்சித் தொகுப்பினை   கவிஞர் அழகு தனு வழங்கினார் .