ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மட்டக்களப்பு ஊடகவியலாளர்களிடம் தேர்தல் வேளையில் எதிர் கொள்ளும் சவால்கள் பற்றி கருத்துக்களை கேட்டறிந்து கொண்டனர் .

 

 

 


 


 

வரதன்





 கிழக்கு மாகாணத்தில்  ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நோக்குடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தற்போது  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
நாட்டில் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நோக்குடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்படுகின்ற பிரதான வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கண்காணிப்புக்கு குழுவினர் நேரடியாக விஜயம் செய்து தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் பொது மக்களின் பங்களிப்பு ஊடகங்களின் சுதந்திர செயற்பாடு சம்பந்தமான விடயங்களை தற்போது ஆராய்ந்து வருகின்றனர்  ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு நீண்டகால தேர்தல் நோக்கு மேற்பார்வையாளர்


சிசிலியா கி வேணி  தலைமையில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் தேர்தல் நடவடிக்கைகள் சம்பந்தமான பணி மேற்பார்வை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதன் போது பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்ட பொதுமக்கள் கட்சி ஆதரவாளர்களிடம் கூட்டங்களில் கலந்து கொண்ட நோக்கு சம்பந்தமாகவும் தேர்தல் சம்பந்தமாகவும் கலந்துரை யாடப்பட்டதுடன்


ஊடகவியலாளர்களிடமும் இடம் பெறுகின்ற தேர்தல்களில் சுதந்திரமாகப் பணியாற்றுகின்ற தன்மை எதிர்நோக்கப்படும் சவால்கள் அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் சம்பந்தமாகவும் இந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினர்களால் கருத்துப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்