எம்.ஏ.சுமந்திரனிற்கு (M.A Sumanthiran) தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படலாம் ?

 


நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிற்கு (M.A Sumanthiran) தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

இந்தநிலையில், தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என சுமந்திரன் நேற்றையதினம் (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

ஒருவேளை, இதுவும் ஒரு அரசியல் சுத்துமாத்து வேளையாக இருக்குமா என எண்ணத்தோன்றும் அதேவேளை சுமந்திரனை சுற்றியுள்ள சிலர் அவர் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டுமென தீவிரமாக செயற்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு தேசியப்பட்டியல் மூலமாக சுமந்திரன் நாடாளுமன்றம் செல்லாவிட்டாலும், தேர்தலில் போட்டியிட்ட சிறீதரன் தனது பதவியை துறந்து நாடாளுமன்றம் சென்றால் அதற்கு அடுத்தப்படியாக சிறீதரனின் பதவிக்கு விருப்பு வாக்கின் அடிப்படையில் சுமந்திரன் மாற்றப்படுவார்.