அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட இந்த மதுபான சாலைகளுக்கான அனுமதிகளை அரசு இரத்து செய்யுமா? இரா. சாணக்கியன் அரசிடம் கேள்வி

 


 

கடந்த அரசாங்கத்தில் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட 361 மதுபானசாலை அனுமதிகளின் உரிமையாளர்கள்,சிபார்சு செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுமா என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. யான இரா. சாணக்கியன் அரசிடம் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05)  ஒழுங்கு பிரச்சினை எழுப்பிய இந்தக் கேள்வியை கேட்ட இரா.சாணக்கியன் எம்.பி. மேலும் உரையாற்றுகையில்,

கடந்த அரசாங்கத்தில் 361 மதுபானசாலைகளுக்கான  அனுமதிகளை இலஞ்சமாக பெற்றவர்களின் விவரங்களை அரசு சபையில் சமர்ப்பித்தது பாராட்டுக்குரியது. அதேவேளை இந்த மதுபானசாலைகளின் உரிமையாளர்கள், இவற்றுக்கான அனுமதிகளுக்கான  சிபார்சு செய்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்துமா?அத்துடன் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட இந்த மதுபான சாலைகளுக்கான அனுமதிகளை அரசு இரத்து செய்யுமா?

இந்த 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் தொடர்பில் அரசு விளக்கமளிக்க வேண்டும் என சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்கவிடம் கோரினார். எனினும் அரசு தரப்பில் பதில் வழங்கப்படவில்லை.