13ஆவது திருத்தச் சட்டத்தினை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முற்படப் போவதில்லை- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

 

 


 

 13ஆவது திருத்தச் சட்டத்தினை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முற்படப் போவதில்லைஎன்று கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகஈர் தமிழகத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

“13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக நாங்கள் என்ன கருதுகின்றோம் என்பதை விடவும் தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதுதான் முக்கியமான விடயமாகும்என்று தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், “தமிழ் மக்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்றார்கள் என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்துள்ளதுஎன்றும் குறிப்பிட்டாா். அதனடிப்படையில் தான் நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை உள்ளீர்த்திருந்தோம்என்றும் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், “அதுமட்டுமன்றி, 13ஆவது திருத்தச் சட்டம் நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பிலும் காணப்படுகின்றதுஎன்றும், “அந்த வகையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தவுள்ளதோடு அதனையடுத்து இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்என்றும் அவா் மேலும் தெரிவித்தாா்.

தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்கும் விடயமாக 13ஆவது திருத்தச் சட்டத்தினையும்,மாகாண சபை முறைமையும் கருதுகின்ற போது அதனை அர்த்தபுஷ்டியான நிருவாகக் கட்டமைப்பாக செயற்படுத்திப் பார்ப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்தாா்.