2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று (27) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாவது தவணை மூன்று கட்டங்களாக நடைபெறுவதோடு, முதல் கட்டம் இன்று முதல் மார்ச் 14 வரை நடைபெறும்.
முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 முதல் 11 வரையிலும், மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 முதல் மே 9 வரையிலும் நடைபெறும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.