வரதன்
புதிய அரசாங்கத்தின் ஸ்ரீலங்கா திட்டமானது மக்களுக்கு உரிய சேவைகள் உரியவாறு சென்றடைய வேண்டுமென்பதில் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறோம் என மாவட்டபாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்தார்
மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதேச மட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதேவேளை இன்று காலை மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்குரிய முதலாவது கடந்த கால அபிவிருத்தி கூட்டம் பிரதேச செயலாளர் திருமதி தெட்சன கௌரி தினேஷ் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்டபாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் பிரதேச அபிவிருத்தி திட்ட கூட்டம் இடம்பெற்றது
புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின் கிளீனிங் ஸ்ரீலங்கா திட்டமானது எமது ஜனாதிபதியினால் மக்கள் மகிழ்ச்சி கரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு இங்கு கருத்து தெரிவித்தார்
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ,டாக்டர் இ.சிறிநாத், எம்.எஸ்.நளீம் உட்பட திணைக்கள தலைவர் கள்,பொலிஸ் உயர் அதிகாரிகள்,கிராம சேவையாளர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய மற்றும் முன்னெடுக்க ப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது
குறிப்பாக தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு உரிய சேவைகள் உரியவாறு சென்றடைய வேண்டுமென்பதில் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறோம் இதற்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் முன்னெடுக்கப்படும் வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் இங்கு வழங்கப்பட்டன.
மழை காலங்களில் ஏற்படும் வெள்ள நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் அதற்கு முன்பாக வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வடிகான்களை சீரமைத்தல் தொடர்பாகவும் எதிர்காலத்தில் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப் படவேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் இதன்போது ஆராயப்பட்டது.