அரச சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தடை விதித்துள்ளது

 


அரச சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தடை விதித்துள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வெற்றிடமாகவுள்ள மிகவும் அத்தியாவசியமான பணியிடங்களுக்கு மட்டுமே அரசாங்கம் ஆட்சேர்ப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.