மட்டக்களப்பில் தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்பு கருத்தரங்கும் கண்காட்சியும்-2025.02.18

                                                                  

 

 







































வரதன்






மட்டக்களப்பு மாவடத்தில் கிழக்கு மாகாணத்திற்கான தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்பு கருத்தரங்கானது இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜயசிங்க   தலைமையில்  கிழக்கு பல்கலைக்கழக Techno Park நிலையத்தில் இன்று (18) இடம் பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக துறையின் பீடாதிபதி பேராசிரியர் என். ராஜேஸ்வரன் கலந்து கொண்டனர்.

இதன் போது தொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதி சந்தையினுல் இணைத்து அவர்களை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகள், மற்றும் வழிகாட்டுதல்கள்  போது வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை சர்வதேச தரத்தில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு எற்றுமதி செய்து அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்வதற்கான  விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.