மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி கொழும்பு கமத் தொழில் திணைக்களத்துக்கு பதவி உயர்வு பெற்று செல்லும் பிரதேச செயலாளர் திரு வ.வாசுதேவன் அவர்களுக்கு பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களால் பிரியாவிடை நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது, இதன் போது மாலைகள் அணிவித்து பொன்னாடை போர்த்தி , நினைவு கேடயங்கள் வழங்கி கௌரவித்தனர் .
மண் முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர்களான திருமதி s சுதாகரன் திருமதி லக்ஷன்யா மற்றும் கணக்காளர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்
டேபா மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் வடக்கு பிரதேச செயலகத்தின் , உத்தியோகத்தர்களால் செயலாளரின் சேவையை பாராட்டி கவிதைகள் வாசிக்கப்பட்டதோடு, நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டன ..