மட்டக்களப்பு மாநகர சபையும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடத்திய பௌர்ணமி கலை விழா12.02. 2025 காந்தி பூங்காவில் இடம்பெற்றது
இந்நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் திரு நா.தனஞ்செயன் தலைமையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணம் கல்வி அமைச்சு செயலாளர் திரு கே குணநாதன் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மாகாண பணிப்பாளர் திரு.சரவணமுத்து நவநீதன், சுவாமி விவேகானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பனிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கெனடி அவர்களும் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.
நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், தொடர்ந்து தலைமை உரை இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து வரவேற்பு நடனம், கிராமிய நடனம் சக்தி தாண்டவம் நாட்டுக்கூத்து பறங்கியர் இசை பாடல்கள் ஆகிய நிகழ்வுகள் அரங்கேறின
மாவட்ட கலாச்சார இணைப்பாளர் த .மலர்ச்செல்வன் நன்றி உரை வழங்கினார் .
மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.