வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு மகா சிவராத்திரி முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதை போல , கிழக்கு மற்றும் மலையக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படாதது ஏன் ?

 


வடமாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மகா சிவராத்திரி முன்னிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக மார்ச் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார்.