தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேரில் சென்று பார்வையிட்டார்.

 


 

 விபத்தில் சிக்கிக் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (15) நேரில் சென்று பார்வையிட்டார். 
 
பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனின் உடல் நிலை தொடர்பிலும் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார். 
 
யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பயணித்த வாகனம் சாவகச்சேரி தளங்கிளப்பு பகுதியில் நேற்று மாலை விபத்துக்குள்ளானதில் அவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர்.