குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) பிடியாணை பிறப்பித்துள்ளது.
மேற்படி வழக்கு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான டயனா கமகே நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை தொடர்ந்து, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி பிடியாணை உத்தரவைப் பிறப்பித்தார்.