தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தினால் நாளை (17.02.2025) சமர்ப்பிக்கப்பவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரால் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரச சேவையில் ஆட்சேர்ப்புகள் பாதீட்டுக்கு பின்னர் ஆரம்பிக்கும் என்றும் ஆனால் அவை அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாடுகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.