சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலா தளம் எனும் தொணிப் பொருளில்' ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக அவர்களின் கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஓர் அம்சமாக மேற்படி நிகழ்சி திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பாலையடித்தோணா, கோரகல்லிமடு மற்றும் கிரான் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.
கிரான் செயலாளர் கா. சித்திரவேல் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா, உதவி பிரதேச செயலாளர் எஸ் லோகினி, கணக்காளர் மோகன் ராஜ், தேசிய மக்கள் சக்தியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் வங்கி மற்றும் நிதி மன்றத்தின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினருமாகிய க.திலிப்குமார் .232 ஆம் படைப் பிரிவு கட்டளை தளபதி, மற்றும் படையினர், சந்திவெளி பொலிஸார், கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் ராஜ் கீதன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்
இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், விளையாட்டு கழகங்கள், மீனவ சங்கத்தினர், வாழைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
கடற்கரையில் காணப்பட்ட பிளாஸ்ரிக் பொருட்கள்.ஏனைய உக்கக் கூடிய உக்காத கழிவுப் பொருட்கள் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாகவுள்ள போக்குவரத்து பாதைகளில் காணப்பட்ட புற்கள் மற்றும் பற்றைகள் என்பன துப்பரவு செய்யப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.
இன்று இவ் நிகழ்சி திட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரையை அண்மித்த 23 பிரதேசங்களில் சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.