கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (14) ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில், நாளை (16) சனிக்கிழமை காலை திருநாள் திருப்பலியுடன் காலை ஒன்பது மணியளவில் திருவிழா நிறைவு பெறவுள்ளது.
குறித்த விடயத்தை யாழ் (Jaffna) மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் (Jebaratnam) அடிகளார் தெரிவித்துள்ளார்.
யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வழமை போல இந்த வருடமும் இந்திய இலங்கை பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருநாட்டு பக்தர்கள் எட்டாயிரம் பக்தர்களும் சிவகங்கை மறைமாவட்ட ஆயருடன் இணைந்து 100 குருக்களும் இந்த யாத்திரையில் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.