மட்டக்களப்பில் தமிழ் சங்க மண்டபத்தில் இந்நிகழ்வானது தமிழ் சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களுடைய தலைமையில் 13.03.2025 வியாழக்கிழமை மிகச் சிறப்பாக இடம்பெற்றது
நிகழ்வானது மங்கள விளக்கேற்றலோடு ஆரம்பிக்கப்பட்டு
தொடர்ச்சியாக SPAND அமைப்பின் சிறுவர் கழக உறுப்பினரான நிவேஷ் அவர்கள் தமிழ்மொழி வாழ்த்து பாடலினை தொடர்ந்து வரவேற்பு நடனமானது இடம்பெற்றது இடம்பெற்றது
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர்
பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி அம்மையார் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
அதனை தொடர்ந்து கதிரவன் கலை கழகத்தினுடைய தலைவர் கதிரவன் இன்பராசா அவர்கள் அறிமுக உரையினை சுவைஞர்களுக்கு நயவுரைக்கு ஆர்வமூட்டும் வகையில்
உரையாற்றினார்
தொடர்ச்சியாக நூல் வெளியீடு செய்கின்ற நிகழ்வானதில் அதிதிகளின் வரவேற்போடும் வாழ்த்தோடும் அரங்கக் கரகோசத்தோடு மிகச் சிறப்பாக இடம் பெற்றது
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் திரு.க.மோகனதாசன் அவர்களின் காந்தக் குரலினால் நயவுரையானது அரங்கம் அதிர நிகழ்ந்தது
மகரகம தேசிய கல்வி நிறுவகம் தமிழ்மொழி துறை பணிப்பாளர் கலாநிதி முருகு தயாநிதி அவர்களதும்
மட்டக்களப்பு உயர்தொழில்நுட்ப கல்லூரியினுடைய பணிப்பாளர் திரு செல்வரத்தினம் ஜெயபாலன் ஆகியோர்களின் விருந்தினர் உரையும் இடம்பெற்றது
அத்தோடு நூலாசிரியர் கவிமகள் ஜெயவதி அவர்களுடைய ஏற்புரை இடம் பெற்றது அதனைத் தொடர்ந்து
SPAND அமைப்பினர்களாலும் கதிரவன் கலைக்கழக உறுப்பினர்களாலும் தமிழ் சங்கத்தின் உடைய உறுப்பினர்களாலும் நூலாசிரியருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டது
தொடர்ச்சியாக வருகை தந்த சுவைஞர்களுக்கு நூலாசிரியரின் கரங்களால் நூல் வழங்கப்பட்டு சுகுணதாஸ் சசிகுமார் அவர்களுடைய நன்றியுரை உடன் நிகழ்வானது இனிதே நிறைவடைந்தது...