திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி விபத்தில் காயமடைந்த 29 பேர் வைத்தியசாலையில் .

 








மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுர பகுதியில் லொறி ஒன்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து ஒன்றும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில்  சனிக்கிழமை (01) பகல் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 29 பேர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்