மட்டக்களப்பு - கரடியனாறு பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 31 பாடசாலை மாணவர்கள் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் சில மாணவர்கள் மேலதிக சிகிட்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.